Sunday, August 28, 2011

செங்கொடி செய்தது தியாகமா?

ச்சே, இந்த சமுகத்தை நினைத்தாலே கேவலமாக உள்ளது. அன்று தூத்துக்குடியில் முத்துகுமார் தீக்குளித்தார் என்றால் அதில் ஒரு காரணம் உள்ளது, அது ஏற்கக் கூடியது. தமிழ் இனத்தில் பிறந்த அவர் தன இனமே அழியக் கூடிய நிலையில் உள்ளதே என்ற கவலையில் உயிர் துறந்தார்.

ஆனால், இன்று காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டது சரியான காரணத்திற்குத் தானா?

ஒரு தேசத் தலைவரை, ஒரு இளம் பிரதமரை கொள்வதற்கு ஒரு கூட்டமே திட்டம் தீட்டுமாம், அந்தக் கூட்டத்தின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒரு சில சமூக விரோதிகள் கூடி உதவி செய்வார்களாம், ஆனால் அந்தப் பாவிகளை சட்டத்திற்குமுன் கொண்டுவந்து அவர்களுக்கு தண்டனை மட்டும் கொடுக்கக் கூடாதாம். இந்த வாதம் சரி என்றால், அஜ்மல் கசாப் என்ற அயோக்கியனுக்குக் கூட மரண தண்டனை கொடுக்கக் கூடாதே!

நான் மத்திய அரசையோ காங்கிரஸ் கட்சியையோ ஆதரித்து இதை எழுதவில்லை.  எது எப்படியென்றாலும் ஒரு சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு யார் உதவி செய்தாலும் சட்டத்தின் முன் அவர் தண்டிக்கப் பட வேண்டியவரே! இதில் தமிழ், தமிழினம் புண்ணாக்கு எல்லாம் தேவையே இல்லை.

என்னைப் பொறுத்தவரை செங்கொடி செய்தது தியாகம் இல்லை, அவரை வளர்த்த இந்த நாட்டுக்கு அவர் செய்த துரோகம் தான் இந்த தீக்குளிப்பு. இந்த லட்சணத்தில் அவரை மாவீரன் முத்துகுமாருடன் ஒப்பிட்டு அந்த உண்மையான தமிழின உணர்வாளரை கொச்சைப் படுத்த வேண்டாம்.

No comments: